/* */

வேலூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து நில அதிர்வு. அதிர்ந்து போன மக்கள்

வேலூர் மாவட்டத்தில் ஒரு மாதத்திற்குள் 3வது முறையாக நிலஅதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்

HIGHLIGHTS

வேலூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து   நில அதிர்வு. அதிர்ந்து போன மக்கள்
X

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பேர்ணாம்பட்டில் இன்று காலை 9:30 மணியளவில் அடுத்தடுத்து 2 முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. சுமார் 3 வினாடிகளுக்கு ஏற்பட்ட நில அதிர்வால் வீட்டில் இருந்த பாத்திரங்கள், பொருட்கள் உருண்டு விழுந்ததாக கூறப்படுகிறது. நில அதிர்வால் அச்சமடைந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் 29ம் தேதி பேர்ணாம்பட்டு அருகே உள்ள கமலாபுரம், சிந்தக்கனவாய், கவுரவப்பேட்டை, டிடி மோட்டூர், பெரியப்பள்ளம் ஆகிய 5 கிராமங்களில் நில அதிர்வு ஏற்பட்டது.

அதை தொடர்ந்து கடந்த 23ம் தேதியும் பேர்ணாம்பட்டு சுற்றுவட்டாரத்தில் நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியிருந்தது. இந்நிலையில் 3வது முறையாக அதே இடத்தில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

வேலூர் நில அதிர்வு குறித்து வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நில அதிர்வுக்கான காரணம் குறித்து நிபுணர்களை கொண்டு கண்டறியுமாறு மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் பெரிய பாதிப்புகள் ஏற்படும் முன்னர் காரணத்தை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 25 Dec 2021 12:14 PM GMT

Related News

Latest News

  1. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  2. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  3. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  4. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய
  5. தொழில்நுட்பம்
    A1 குரல் குளோனிங் மூலம் மோசடி : கவனமாக இருக்க போலீஸ் அறிவுரை..!
  6. நாமக்கல்
    நாயை அடித்தவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம்
  7. தமிழ்நாடு
    பள்ளி திறப்பு தள்ளி வைப்பு? அமைச்சர் ஆலோசனை..!
  8. லைஃப்ஸ்டைல்
    karma related quotes -‘கர்மா’ தமிழ் இலக்கியத்தில் ஒரு வழிகாட்டும்...
  9. இந்தியா
    மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை..!
  10. லைஃப்ஸ்டைல்
    DP யில் வைக்கப்படும் வாழ்க்கை மேற்கோள்கள் தமிழில்!