Begin typing your search above and press return to search.
திருப்பூர் மாவட்டத்தில் சாரல் மழை!
திருப்பூர் மாவட்டத்தில் இன்று லேசான சாரல் மழை பெய்தது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
HIGHLIGHTS
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த் சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வந்தது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் துவங்கிய பிறகு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
தமிழகம் உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், நேற்று மாலை திருப்பூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இன்றும் காலையில் இருந்தே சாரல் மழை பெய்தது. திருப்பூர், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் உள்ளிட்ட இடங்களில் பெய்த சாரல் மழையால் பொது வெப்பம் தணிந்து காணப்பட்டது.
மழையால் ஒரு பக்கம் மகிழ்ச்சி அடைந்தாலும், கடந்த சில நாட்களாக கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. மழையால் காய்ச்சல் ஏற்படுமா என்ற பீதியும் மக்களிடம் ஏற்பட்டு உள்ளது