/* */

நிலுவையில் உள்ள நூறு நாள் சம்பளத்தை வழங்க கோரி தொழிலாளர்கள் மனு

நிலுவையில் உள்ள நூறு நாள் சம்பளத்தை வழங்க வேண்டும் என நூறு நாள் திட்ட தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

நிலுவையில் உள்ள நூறு நாள் சம்பளத்தை வழங்க கோரி தொழிலாளர்கள் மனு
X

நூறு நாள் திட்டத்தில் நிலுவை சம்பளம் வழங்க கோரி கலெக்டர் ஆபீஸில் மனு அளித்த தொழிலாளர்கள்.

திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், வெள்ளக்கோவில், காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட இடங்களில் நூறு நாள் திட்டத்தில் வேலை செய்து வருகின்றனர். பல்லடம் சிட்டாம்பாளையம் பகுதியில் நூறு நாள் திட்ட தொழிலாளர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. தீபாவளி பண்டிகை என்பதால், நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க கோரி 20 க்கும் மேற்பட்ட நூறு நாள் திட்ட பெண் தொழிலாளர்கள் திருப்பூர் கலெக்டர் ஆபீஸில் நடந்த மனு நீதிமுகாமில் மனு அளித்தனர். மனுவில், சிட்டாம்பாளையம் பகுதியில் நூறு நாள் திட்டத்தில் பல்வேறு பணிகள் செய்து வருகிறோம். கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்காமல் நிலுவையில் உள்ளது. பண்டிகை காலம் என்பதால் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Updated On: 1 Nov 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  5. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  8. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  9. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  10. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்