/* */

கொலை வழக்கு 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருப்பூர் கோர்ட் தீர்ப்பு

Murder Case Court Judgement திருப்பூர் பனியன் கம்பெனியில் தன்னுடன் வேலை பார்த்தவரை கொலை செய்ததாக நண்பர்கள் 3 பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கி கோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்தது.

HIGHLIGHTS

கொலை வழக்கு 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருப்பூர் கோர்ட் தீர்ப்பு
X

நண்பரைக் கொலை செய்த 3 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. 

Murder Case Court Judgement

திருப்பூர் கல்லம்பாளையம் நொய்யல் ஆற்றங்கரை ஓரம் உள்ள காட்டுப் பகுதியில் பயன்படுத்தப்படாத கட்டிடத்திற்குள் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் தேதியன்று அழுகிய நிலையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். கை, கால்கள் கட்டப்பட்டு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கொலை செய்யப்பட்ட வாலிபர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த மேட்டுக்காட்டு வலசு பகுதியை சேர்ந்த அஜித்குமார்(23) என்பதும் இவர் ராக்கியாபாளையம் பகுதியில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் அஜித்குமாருடன் தங்கி இருந்த நண்பர்கள் கோவை துடியலூரை சேர்ந்த வல்லரசு (26), திருப்பூரை சேர்ந்த கணேசன் (26), ஷாஜகான் (28) ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 3 பேரும் சேர்ந்து அஜித்குமாரை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளிகள் 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா 2ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் நடராஜன் தீர்பளித்தார் இந்த வழக்கில் மாவட்ட குற்றத்துறை அரசு வக்கீல் கனகசபாபதி வாதாடினார்

Updated On: 5 March 2024 4:30 PM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  3. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  4. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  5. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  6. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  8. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  9. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?