/* */

திருப்பூரில் கஞ்சா விற்ற நான்கு வாலிபர்கள் கைது

திருப்பூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நான்கு வாலிபர்களை கைது செய்த போலீசார், 3.5 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.

HIGHLIGHTS

திருப்பூரில் கஞ்சா விற்ற நான்கு வாலிபர்கள் கைது
X

திருப்பூரில் கஞ்சா விற்ற நான்கு பேர் கைது.

திருப்பூர் வடக்கு போலீசார், மாநகர பகுதிகளில் கஞ்சா தடுப்பு தீவிர சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி எதிரே உள்ள பாலத்தில், கஞ்சா விற்பனை செய்த கல்லம்பாளையத்தை சேர்ந்த குணசேகரன் (வயது 19) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து, 750 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுபோல், கொடிக்கம்பம் டாஸ்மாக் கடை அருகே கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமாரை (21) கைது செய்து, 450 கிராம் கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.

கோல்டன் நகர் எம்.ஜி.ஆர்.காலனியில் கஞ்சா விற்ற பவானி நகரை சேர்ந்த பிரபுவை (30) கைது செய்து, அவரிடம் இருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பவானிநகரில் கஞ்சா விற்ற கவுண்டநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சுரேஷ்குமாரை (25) கைது செய்து, 900 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Updated On: 14 Sep 2022 3:35 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  2. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  3. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  4. லைஃப்ஸ்டைல்
    முள்ளுக்குள் மலர்ந்த ரோஜா, அப்பா..!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  7. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  8. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  10. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!