Begin typing your search above and press return to search.
பல்லடம் பகுதியில் சாராயம், கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
பல்லடம் பகுதியில் சாராயம், கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் சாராயம், கஞ்சா வைத்திருப்பதாக பல்லடம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில், இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் தலைமையிலான போலீஸார் மாணிக்காபுரம் பகுதியில் சோதனை செய்தனர்.
பெருமாள்,42, என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது, வீட்டில் ஒரு லிட்டர் சாராயம், 2 லிட்டர் ஊறல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீஸார் கைது செய்து, அவரிடம் இருந்த சாராயம், ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் செட்டிபாளையம் பகுதியில் வீட்டில் 2 கஞ்சா செடி வளர்த்த சக்திவேல்,22, என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.