/* */

பருவநிலை மாநாடு வெற்றிப்பெற மரக்கன்று நடவு

காலநிலை மாற்றத்துக்கான தீவிரத்தை குறைப்பது தொடர்பான பருவநிலை மாநாடு, வெற்றி பெற வேண்டி மரக்கன்று நடப்பட்டது.

HIGHLIGHTS

பருவநிலை மாநாடு வெற்றிப்பெற மரக்கன்று நடவு
X

பருவநிலை மாநாடு வெற்றி பெற வேண்டி, பல்லடத்தில் மரக்கன்று நடப்பட்டது.

சிஓபி., 20 எனப்படும், காலநிலை மாற்றத்துக்கான தீவிரத்தை குறைப்பது தொடர்பாக பருவநிலை மாநாடு, ஸ்காட்லாந்து, கிளாஸ்கோவில் வரும், 12ம் தேதி நடக்க இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். மாநாடு வெற்றி பெற வேண்டி, மரக்கன்று நடும் நிகழ்ச்சி, பல்லடம் அருகேயுள்ள, காரணம்பேட்டை மகிழ்வனம் தாவரவியல் பூங்காவில் நடந்தது.

ஊராட்சி தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். பூங்கா செயலாளர் பாலசுப்பிரமணியம், தி சாய் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் கோபிநாத் அருணாச்சலம், செயலாளர் சைலேஷ், திட்ட தலைவர் வேலு, பூங்கா தலைவர் மாரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பருவநிலை மாநாடு வெற்றி பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, 'சிஓபி' என்ற வடிவமைப்புடன் பூச்செடிகள் நடப்பட்டன.

Updated On: 1 Nov 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!