/* */

திருப்பூர் அரசு பள்ளிகளில் நாளை முதல் பாடநூல் விநியோகம்

திருப்பூரில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் பாடநூல் விநியோகம் செய்யப்படுகிறது.

HIGHLIGHTS

திருப்பூர் அரசு பள்ளிகளில் நாளை முதல் பாடநூல் விநியோகம்
X

திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், பல்லடம், உடுமலை மாவட்ட கல்வி அலுவலர்கள் சார்பில், அனைத்து வகை அரசு, அரசு நிதிஉதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதில், அனைத்து வகை வகுப்புகளுக்கான புதிய மாணவர் சேர்க்கை நாளை 28 ம் தேதி முதல் நடத்தப்பட வேண்டும்.

அதேபோல், நாளை முதல் பள்ளியில் படிக்கும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பாடநூல்கள் வழங்கப்பட வேண்டும். மாணவர்கள் சேர்க்கை சார்ந்த விவரங்கள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் படிவத்தில் தினசரி பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும்.

மாணவர்களுக்கு பாட நூல்கள் வழங்கும்போது கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் வகுப்புகளுக்கான கால அட்டவணை மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து மேற்கண்ட கல்வி மாவட்டங்களில் , அரசு பள்ளிகளில் நாளைமுதல் பாட நூல்கள் வழங்கப்பட உள்ளன.

Updated On: 27 Jun 2021 1:35 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  5. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  6. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  7. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  8. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  10. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...