/* */

ஜிஎஸ்டி வரி உயர்வு: தாராபுரத்தில் ஜவுளிக்கடைகள் அடைப்பு

ஜி.எஸ்.டி., வரி உயர்வை கண்டித்து, தாராபுரத்தில் ஜவுளிக்கடைகளை அடைத்து, போராட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

ஜிஎஸ்டி வரி உயர்வு: தாராபுரத்தில் ஜவுளிக்கடைகள்  அடைப்பு
X

கோப்பு படம் 

ஆடைகளுக்கான ஜி.எஸ்.டி., வரியை, வரும் ஜனவரி, முதல் தேதியில் இருந்து, 5 சதவீதத்தில் இருந்து, 12 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இதற்கு ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஜவுளிக்கடை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜி.எஸ்.டி., வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நேற்று, ஜவுளி கடை உரிமையாளர்கள், வியாபாரிகள் மற்றும் டெய்லர்கள் தங்களது கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 150க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

தாராபுரம் ஜவுளிக்கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் சண்முகவேல் தலைமையில், வியாபாரிகள் தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றனர். பின்னர் ஜி.எஸ்.டி. வரியை குறைக்க கோரி, கோட்டாட்சியரிடம் மனு வழங்கினர்.

Updated On: 24 Dec 2021 1:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!