/* */

தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி

திருப்பூர் மாவட்டம், அமராவதி ஆற்றில் மூழ்கி, ஆறு பேர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி
X

மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு படையினர்.

திருப்பூர் மாவட்டம் இடுவாய், அண்ணாமலை கார்டன் பகுதியை சேர்ந்த 30 பேர், திண்டுக்கல் மாவட்டம் மாம்பாறையில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, இன்று காலை, 7 மணிக்கு கிளம்பி சென்றுள்ளனர். நிகழ்ச்சியை முடித்துவிட்டு, தாராபுரம் வழியாக திருப்பூர் வந்துள்ளனர். வரும் வழியில் மாலை 4 மணிக்கு தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில்,குளிக்க சென்றனர்.

அதில் ஒருவர் ஆழமான பகுதிக்கு செல்ல, நிலைத்தடுமாறி தண்ணீரில் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்ற ஒருவர் பின் ஒருவராக, 8 பேர் செல்ல, அடுத்தடுத்து அவர்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். தகவல் தெரிந்து, தாராபுரம் தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், சரண், ஜீவா ஆகிய இருவரையும் உயிருடன் மீட்டனர். மோகன் 17, ரஞ்சித் 20, அமிர்தகிருஷ்ணன் 18, யுவன் 19, சக்கரவர்மன் 18, ஸ்ரீதர் 17, ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர். அவர்களை தீயணைப்புத்துறையினர் சடலமாக மீட்டனர். இதுகுறித்து, தாராபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 17 Jan 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  2. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  3. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  4. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  6. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  7. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  10. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...