/* */

வாணியம்பாடியில் வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த கலெக்டர் அமர் குஷ்வாஹா

வாணியம்பாடியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்கு எண்ணும் மையத்தினை  மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

வாணியம்பாடியில் வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த கலெக்டர் அமர் குஷ்வாஹா
X

வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு மேற்கொள்ளும் கலெக்டர் அமர் குஷ்வாஹா

தமிழகத்தில் நகரப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகின்றது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள் 3 பேரூராட்சிகளில் உள்ளது ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் ஆலங்காயம், நாட்றம்பள்ளி, உதயேந்திரம் ஆகிய 3 பேரூராட்சிகளுக்கு வருகிற 19ஆம் தேதி நகரப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகின்றன.

இங்கு பதிவாக கூடிய மின்னணு வாக்கு பெட்டிகளை பாதுகாப்பாக வைக்கப்பட்டு வாக்கு என்னும் மையமாக வாணியம்பாடி அடுத்த சின்னகல்லுபள்ளி பகுதியில் உள்ள ஜெயின் மகளிர் தனியார் கல்லூரியில் வருகிற 22-ஆம் தேதி வாக்கு எண்ணப்படுகின்றன.

இந்தநிலையில் தேர்தல் பார்வையாளர் பிரதீப் குமார் மற்றும் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான அமர் குஷ்வாஹா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்

மின்னணு வாக்குப் பெட்டிகள் வைக்கக்கூடிய அறை மற்றும் வாக்குகள் எண்ணக் கூடிய அறைகள் உள்ளிட்ட அமைவது குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் அளித்து அதற்கான பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். பாதுகாப்பு பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்

இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் உடனிருந்தனர்.

Updated On: 8 Feb 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!