/* */

வாணியம்பாடியில் நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் அதிமுக வேட்பாளர்கள்

வாணியம்பாடியில் மேளதாளங்கள் முழங்க வீதி வீதியாக சென்று நூதன முறையில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு.

HIGHLIGHTS

வாணியம்பாடியில் நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் அதிமுக வேட்பாளர்கள்
X

5 வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பிரகாசம் தள்ளுவண்டியில் காய்கறிகளை விற்பனை செய்து நூதன முறையில் வாக்குகள் சேகரித்தார்.

வாணியம்பாடியில் மேளதாளங்கள் முழங்க வீதி வீதியாக சென்று நூதன முறையில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. இதில் 5 வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பிரகாசம் என்பவரை ஆதரித்து வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அப்பகுதியில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்பொழுது வேட்பாளர் பிரகாசம் தெருக்களை தொடப்பம் கொண்டு சுத்தம் செய்தும், தள்ளுவண்டியில் காய்கறிகளை விற்பனை செய்து நூதன முறையில் வாக்குகள் சேகரித்தார். அதேபோன்று வாணியம்பாடி 11 வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கலைவாணி குமார் என்பவரை ஆதரித்து எம்எல்ஏ செந்தில்குமார் வீதி வீதியாக சென்று துண்டுப்பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார்.

அப்போது மேள தாளங்கள் முழங்க மயிலாட்டம், குதிரை ஆட்டம், பொம்மலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சியுடன் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் வாணியம்பாடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவி சம்பத்குமார், நகரச் செயலாளர் சதாசிவம் உள்ளிட்ட அதிமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் என பலர் உடனிருந்தனர்.

Updated On: 15 Feb 2022 4:39 PM GMT

Related News

Latest News

  1. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  2. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  3. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  4. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய
  5. தொழில்நுட்பம்
    A1 குரல் குளோனிங் மூலம் மோசடி : கவனமாக இருக்க போலீஸ் அறிவுரை..!
  6. நாமக்கல்
    நாயை அடித்தவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம்
  7. தமிழ்நாடு
    பள்ளி திறப்பு தள்ளி வைப்பு? அமைச்சர் ஆலோசனை..!
  8. லைஃப்ஸ்டைல்
    karma related quotes -‘கர்மா’ தமிழ் இலக்கியத்தில் ஒரு வழிகாட்டும்...
  9. இந்தியா
    மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை..!
  10. லைஃப்ஸ்டைல்
    DP யில் வைக்கப்படும் வாழ்க்கை மேற்கோள்கள் தமிழில்!