/* */

வாணியம்பாடி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய 5 பேர் கைது; போலீசார் அதிரடி

வாணியம்பாடி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியதாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

வாணியம்பாடி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய 5 பேர் கைது; போலீசார் அதிரடி
X

கள்ளச்சாராயம் காய்ச்சியதாக கைது செய்யப்பட்ட 5 பேர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைனயடுத்து, வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் பழனி செல்வம் தலைமையில் போலீசார் ஒரு குழு கொரிபள்ளம் பகுதியிலும் மற்றோர் குழு மாதகடப்பா, தேவராஜபுறம் மலைப் பகுதிகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது கொரிப்பள்ளம் பகுதியில் உள்ள மறைவான இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்ச தயாராக பதுக்கி வைத்திருந்த சுமார் 4 ஆயிரம் லிட்டர் சாராய ஊரல்களை அழித்தனர். மேலும் தப்பியோடிய கள்ளச்சாராய கும்பலை தேடி வருகின்றனர்.

இதேபோல் மாத கடப்பா மலைப்பகுதியில் வீடுகளுக்கு பின்புறம் உள்ள மறைவான இடங்களில் கள்ளச்சாராயம் காய்சிக்கொண்டு இருந்ததை கண்டறிந்த போலீசார், அங்கு சென்று பேரல்களில் இருந்த சுமார் 500 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் அடுப்புகளை அழித்தனர்.

மேலும் கள்ளச்சாராயம் கடத்த பயன்படுத்தும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து கள்ளச்சாராய கும்பல சேர்ந்த விஜயன், சூரியா, வேலு, சிவாஜி, செல்லப்பா ஆகிய 5 பேரை கிராமிய போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 24 Aug 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  3. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  6. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  7. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  8. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  9. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  10. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!