/* */

திருப்பத்தூரில் நள்ளிரவில் ஏரியில் மண் கடத்திய மூன்று பேர் கைது

திருப்பத்தூரில் நள்ளிரவில் ஏரியில் மண் கடத்திய மூன்று பேர் கைது செய்யப்பட்டு ஒரு ஜேசிபி, 2 டிப்பர் லாரிகள் பறிமுதல்

HIGHLIGHTS

திருப்பத்தூரில் நள்ளிரவில் ஏரியில் மண் கடத்திய மூன்று பேர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள்

திருப்பத்தூர் மாவட்டம் வெங்களாபுரம் அருகே உள்ள ராச்சமங்களம் ஏரியில் நள்ளிரவில் தொடர்ந்து மண் கடத்துவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்திக்கு தொடர்ந்து புகார் வந்திருந்தன.

அதன் அடிப்படையில் நேற்று நள்ளிரவில் எஸ்பி தனிப்படை பிரிவு போலீசார் அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அனுமதி இன்றி மண் கடத்தி வந்த மூன்று பேரை எஸ்பி தனிப்படை போலீசார் நள்ளிரவில் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது, ஏரி பகுதியில் இருந்து திருப்பத்தூரில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு சொந்தமான வெங்களாபுரம் பகுதியில் விளைநிலங்களை ரியல் எஸ்டேட் மனைகள் விற்பனை செய்ய ஏரியில் இருந்து மண் கடத்தியது விசாரணையில் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து மாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன், அண்ணாமலை, மாரியப்பன் ஆகியோர் மீது சட்டவிரோதமாக மண் கடத்தியதாக திருப்பத்தூர் கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை ஈடுபட்டு வருகின்றனர், மேலும் அவர்களிடமிருந்து ஒரு ஜேசிபி 2 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Updated On: 24 Aug 2021 6:25 AM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  2. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  4. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  5. மேலூர்
    மதுரை அருகே யானைமலை ஒத்தக்கடையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
  6. ஈரோடு
    ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024"...
  7. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  8. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  9. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  10. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?