/* */

முதியவர்களிடம் மாடிப்படி இறங்கி வந்து மனுக்களை பெற்ற திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்

திருப்பத்தூரில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேரடியாக மக்களை சந்தித்து மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

HIGHLIGHTS

முதியவர்களிடம் மாடிப்படி இறங்கி வந்து   மனுக்களை பெற்ற திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்
X

திருப்பத்தூரில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேரடியாக மக்களை சந்தித்து மனுக்களை பெற்றார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தோறும் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறாத நிலையில் மக்களின் குறைகளை புகார் பெட்டி மூலம் அளிக்க மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு அறிவித்திருந்தார். அதன்படி படிப்படியாக நோய் தொற்றானது குறைந்து வரும் நிலையில் மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்று அதன் மீது நடவடிக்கை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை என்பதால் மக்கள் தங்களுடைய குறைகளை மனுக்கள் மூலமாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருந்தனர். அப்போது கணவன்-மனைவியான முதியோர்கள் இருவர் தங்களுடைய குறைகளை மனுக்களாக வழங்க வந்தனர். அப்பொழுது மனுக்களை கொடுக்க மேல்தளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரிடம் சந்திக்க தள்ளாத வயதில் படியேறி மனுக்களை எடுத்துச்சென்றனர்

இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் உடனடியாக கீழே இறங்கி வந்து மனுக்கள் கொடுக்க காத்திருந்த அவர்களை நேரடியாக அவர்களிடம் மனுக்களை பெற்று உடனடியாக மனுக்கள் மீது அந்தந்த துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Updated On: 12 July 2021 9:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  3. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  4. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  5. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  6. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  7. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  8. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  9. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்
  10. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...