/* */

நாட்றம்பள்ளி அருகே தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபரின் சடலம் மீட்பு 

நாட்றம்பள்ளி அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபரின் சடலம் மீட்பு  கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை..

HIGHLIGHTS

நாட்றம்பள்ளி அருகே தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபரின் சடலம் மீட்பு 
X

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா உட்பட்ட வெக்கல்நத்தம் ஊராட்சி லட்சுமிபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் புளியமரத்தில் தூக்கில் தொங்கியபடி சடலமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் நாட்றம்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இறந்த வாலிபர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்னகல்லுபள்ளி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் விக்னேஷ் (வயது 30) என தெரியவந்தது. எதற்காக இந்த பகுதிக்கு வந்தார் இவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்ரா என இரு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Updated On: 5 May 2021 12:07 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    திருப்தி மேற்கோள்கள் ஆங்கிலத்தில் அறிவோமா?
  2. திருவள்ளூர்
    திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ரமணா
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    எனக்குள் நீ ; உனக்குள் நான்..! தொடர்வோம் இனிதே இணைந்து..!
  5. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!
  6. நாமக்கல்
    கோர்ட் உத்தரவின்படி இழப்பீடு செலுத்ததாத கான்ட்ராக்டர் நுகர்வோர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சொத்து இல்லைன்னாலும் கெத்து இருக்கணும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடைக் காலத்துல ஈஸியா எடையை குறைக்கலாம்! எப்படி தெரியுமா?
  9. தொண்டாமுத்தூர்
    நகை பறிப்பு, திருட்டு கொள்ளை சம்பவங்கள் கோவையில் அதிகரித்துள்ளது :...
  10. லைஃப்ஸ்டைல்
    வீரர்கள் சாப்பிடும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் எவை தெரியுமா?