/* */

ஆம்பூரில் வேன், கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து

ஆம்பூரில் வேன், கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

ஆம்பூரில் வேன், கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து
X

விபத்துக்கான மாதிரி படம் 

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் கன்னிகாபுரம் முதல் சான்றோர்குப்பம் வரை கடந்த ஓராண்டு காலமாக தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சென்னை பெங்களூர் மற்றும் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் ஒரு வழிச்சாலையாக மாற்றியமைக்கப்பட்டு வாகனங்கள் செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வேலூரில் இருந்து ஆம்பூரில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வேன் மூலம் 15க்கும் மேற்பட்டோர் வந்து கொண்டிருந்த போது, ஆம்பூர் பேருந்து நிலையம் அருகில் பெண் உட்பட இருவர் குறுக்கே வந்ததால் அவர்கள் மீது மோதாமல் இருக்க வேன் திருப்பிய போது முன்னாள் சென்ற கார் மீது மோதியதால் அடுத்தடுத்து 3 கார்கள் மோதி விபத்துக்குள்ளானது. வேன் மற்றும் கார்கள் கண்ணாடிகள் உடைந்தும், முன், பின் பக்கங்களில் சேதமடைந்தன.

மேலும் வேனில் பயணம் செய்தவர்கள் காயமின்றி உயிர்த்தப்பினர். விபத்து குறித்து ஆம்பூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 6 Nov 2023 10:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  2. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  3. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  4. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  5. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  6. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  7. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  8. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  9. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  10. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...