Begin typing your search above and press return to search.
நெல்லையில் மதுபானம், புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 47பேர் கைது
நெல்லை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானம், புகையிலை பொருட்களை விற்பனை செய்த 47 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
HIGHLIGHTS
நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், சட்டவிரோதமாக மதுபானங்கள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து 27.07.2021 முதல் 01.08.2021-ம் தேதி வரை நெல்லை மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், சட்டவிரோத மதுபான பாட்டில்கள், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 47 பேரை கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து 123 மதுபான பாட்டில்கள் மற்றும் 3 கிலோ 675 கிராம் புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.