/* */

நெல்லை மாவட்டத்தில் 315 கைபேசிகள் உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறை

மோசடி செய்யப்பட்டதாக 5 லட்சத்து 36 ஆயிரத்து 750 ரூபாய் வங்கியில் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கண்காணிப்பாளர் சரவணன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

நெல்லை மாவட்டத்தில் 315 கைபேசிகள் உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறை
X

கைபேசிகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன்.

நெல்லை மாவட்டத்தில் கைபேசியை தவறவிட்ட மற்றும் தொலைந்ததாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இதுவரை 39 லட்சத்து, 74 ஆயிரத்து 735 ரூபாய் மதிப்பில் 315 கைபேசிகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் தெரிவித்தார்.

நெல்லை மாவட்டத்தில் கைபேசியை தவறவிட்டவர்கள், தொலைத்தவர்கள் தங்களது கைபேசி கண்டுபிடித்து கொடுக்குமாறு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சைபர்கிரைம் பிரிவில் ஏராளமானவர்கள் புகார் அளித்திருந்தனர்.

இந்த நிலையில், இதனை துரிதப்படுத்தி கைபேசியை மீட்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு 10 லட்சத்து 46 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான 70 கைபேசிகளை மீட்டனர்.

இதனை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் காவல் கண்காணிப்பாளர் சரவணன் கலந்து கொண்டு மீட்கப்பட்ட கைபேசி மற்றும் மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தும் வகையில் மரக்கன்றையும் உரியவர்களிடம் வழங்கினார்.

இதுபோன்று ஏடிஎம் கார்டு உள்ளிட்ட டிஜிட்டல் முறை மோசடியில் பணத்தை இழந்தவர்களின் பணம் 1 லட்சத்து 77 ஆயிரத்து , 177 ரூபாயும் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது .

பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மாவட்டத்தில் இதுவரை கைபேசிகளை தவறவிட்டவர்கள், தொலைத்தவர்களிடமிருந்து பெறப்பட்ட புகாரில் 315 கைபேசிகள் மீட்கப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு 39 லட்சத்து 74 ஆயிரத்து 135 ரூபாய் ஆகும். தற்போது 70 கைபேசிகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஏடிஎம் கார்டு, பரிசு வந்திருப்பதாக ஓடிபி பெற்றுக்கொண்டு மோசடி வேலை வாங்கித் தருவதாக பண மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டு அதன் மூலம் ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 176 ரூபாய் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் மோசடி செய்யப்பட்ட பணத்தில் 5 லட்சத்து 36 ஆயிரத்து 750 ரூபாய் வங்கியில் முடக்கி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் உங்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள், ஏடிஎம் கார்டு வழங்கல் மற்றும் ஓடிபி எது என்று கேட்டால் அதனை கொடுக்கக் கூடாது. இது தொடர்பான புகார்களை 15 52 60 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என கூறினார்.

Updated On: 13 Dec 2021 7:10 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  2. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  4. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  6. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  7. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  8. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  9. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  10. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!