/* */

நெல்லை கல்குவாரி விபத்து: தேடப்பட்டு வந்த உரிமையாளர்கள் மங்களூரில் கைது

நெல்லை குவாரி புகார் தொடர்பாக தேடப்பட்டு வந்த குவாரி உரிமையாளர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோரை தனிப்படை போலீசார் மங்களூரில் கைது செய்தனர்.

HIGHLIGHTS

நெல்லை கல்குவாரி விபத்து: தேடப்பட்டு வந்த உரிமையாளர்கள் மங்களூரில் கைது
X
கைது செய்யப்பட்ட குவாரி உரிமையாளர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார்.

நெல்லை மாவட்டம், அடுத்த அடைமிதிப்பான் குளத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் கடந்த 14ஆம் தேதி நள்ளிரவு ராட்சத பாறை சரிந்து விபத்து ஏற்பட்டது. இதில் 6 தொழிலாளர்கள் சிக்கிய நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் இணைந்து ஐந்து பேரை மீட்டது. இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். ஆறாவது நபரை தேடும் பணி தீவிரமாக 6 நாட்களாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் குவாரி விபத்து தொடர்பாக முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் 3 பிரிவின் கீழ் குவாரி உரிமதாரர் சங்கரநாராயணன், குவாரி உரிமையாளர்கள் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார், குவாரி மேலாளர் செபாஸ்டின் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் சங்கர நாராயணன் மற்றும் மேலாளர் செபாஸ்டின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் குவாரி உரிமையாளர் செல்வராஜ் மற்றும் குமார் ஆகியோரை ஏஎஸ்பி ரஜத் சதுர்வேதி தலைமையில் 3 தனிப்படை அமைத்து கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடிவந்தனர். மேலும் திசையன்விளையில் உள்ள செல்வராஜ் மற்றும் குமாருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அடை மிதிப்பான் குளத்தில் உள்ள குவாரி அலுவலகத்திலும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

இதனிடையே கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் வைத்து தனி படை போலீசார் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோரை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து நெல்லைக்கு அவர்களை அழைத்து வரும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

Updated On: 20 May 2022 12:16 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  2. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  5. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  6. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  7. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  8. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  9. வீடியோ
    வரிசைகட்டி டூர் அடிக்கும் அரசியல்வாதிகள் |மலைப்பிரதேசங்களில் கூத்து...
  10. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...