/* */

நெல்லையில் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் நாம் தமிழர் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் உயர்வுக்கு காரணமான மத்திய- மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நெல்லையில் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சினர் ஆர்ப்பாட்டம்
X

நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன் மத்திய, மாநில அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன் மத்திய, மாநில அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய- மாநில அரசுகளை கண்டித்து கண்டன முழக்கமிடப்பட்டது. மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பா.சத்யா தலைமையுரையாற்றினார். அம்பை தொகுதி செயலாளர் செல்வன் தொகுத்து வழங்கினார். மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சகாய இனிதா சிறப்புரையாற்றினார். மாநில கொள்ளை பரப்பு செயலாளர் தங்கவேல் கண்டன உரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளர்கள் தமிழ் தேசிய கிருத்தவ கூட்டமைப்பை சேர்ந்த மை.பா.சேசுராஜ், முல்லை நில தமிழர் கட்சியை சேர்ந்த கண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

நெல்லை தெற்கு மாவட்ட செயலாளர் அப்பாக்குட்டி, பாளை தொகுதி செய்தி தொடர்பாளர் கணேசன், அம்பை தொகுதி சுதாகர், இராதாபுரம் தொகுதி ஜேசுதாசன், ஆகியோர் கண்டன உரையாற்றினர். மத்திய மாவட்ட செயலாளர் கண்ணன், பொருளாளர் நம்பிராஜன், தெற்கு மாவட்ட தலைவர் சூசை, நெல்லை தொகுதி செயலார் சந்திரசேகரன், பாளை தொகுதி தலைவர் சக்தி பிரபாகரன், செயலாளர் ஜேக்கப், இராதாபுரம் தொகுதி தலைவர் ஜான்சன், செயலாளர் ஜெகசுப்பிரமணியன், நாங்குநேரி தொகுதி தலைவர் சோமசுந்தரம், செயலாளர் அந்தோனி விஜய் மற்றும் 200க்கும் மேற்பட்ட நாம் தமிழர் உறவுகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Updated On: 30 April 2022 10:51 AM GMT

Related News