/* */

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்

தச்சநல்லூரில் மாநகர் காங்கிரஸ் சார்பில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து நூதன போராட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பெட்ரோல், டீசல்  விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்
X

நெல்லை தச்சநல்லூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி சிலைக்கு மனு அளித்தும், ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடத்தினர்.

நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் பெட்ரோல், டீசல், கேஸ் சுங்ககட்டணம் உயர்வை கண்டித்தும், காலி சிலிண்டர்கள் உடன் ஊர்வலமாக வந்து மத்திய அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி காந்தி சிலைக்கு மனு அளித்து ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு.

பெட்ரோல், டீசல், கேஸ், சுங்க கட்டண உயர்வை கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமை போராட்டம் அறிவித்ததன் அடிப்படையில் பல்வேறு போராட்டங்கள் நாடு முழுதும் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் பெட்ரோல், டீசல், கேஸ், சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நெல்லை தச்சநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதனை தொடர்ந்து பெண்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் காலி சிலிண்டர்கள் மற்றும் காலி மண்ணெண்ணெய் கேண்களுடன் ஊர்வலமாக வந்து மத்திய அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி நெல்லை தச்சநல்லூர் காந்தி சிலைக்கு மனு அளித்தனர். தொடர்ந்து பெண்கள் காலி சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினருடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டனர்.

Updated On: 4 April 2022 8:07 AM GMT

Related News