/* */

தொடர் மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து ஐந்து நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

தொடர் மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
X

நெல்லை மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு.

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக 10 மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. நெல்லையில் தொடர்ந்து 5 நாட்களாக மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து உள்ளது. இந்நிலையில் இன்று தாமிரபரணி ஆற்றில் தொடர் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 55 மில்லி மீட்டர் மழை பொழிந்து உள்ளது. ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தாமிரபரணி கரையோரம் உள்ள மக்களுக்கு தொடர் மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ள அபாயத்தை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Updated On: 3 Nov 2021 5:27 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு