மக்கள் பிரச்சனையை 24 மணி நேரத்தில் தீர்ப்பேன்: பாஜக வேட்பாளர் வாக்குறுதி
27வது வார்டு பாஜக வேட்பாளர் T.பாலாஜி கிருஷ்ணசுவாமி, மக்கள் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்ப்பேன் என வாக்குறுதி அளித்தார்.
HIGHLIGHTS
திருநெல்வேலி மாநகராட்சி தேர்தலில் நெல்லை டவுண் 27 வது வார்டில் பாஜக சார்பில் வழக்கறிஞர் T. பாலாஜி கிருஷ்ணசுவாமி போட்டியிடுகிறார்.
மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு இலவச சட்ட உதவி வழங்குவதோடு, அடிப்படை வசதி சார்ந்த பிரச்சனைகளை 24 மணி நேரத்தில் தீர்ப்பேன் என நெல்லை டவுண் 27வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிடும் வழக்கறிஞர் பாலாஜி கிருஷ்ணசுவாமி அறிவித்துள்ளார்.
நெல்லை டவுண் பகுதியில் உள்ள பெருமாள் கோவில், சிவா தெரு உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட அவர், மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு இலவச சட்ட உதவிகளை வழங்குவேன் என்றும், அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சனைகளை தன்னுடைய கவனத்திற்கு கொண்டு வந்தால் 24 மணி நேரத்தில் தீர்வு காண்பேன் எனவும் உறுதி அளித்து வாக்கு சேகரித்தார்.
பொது வேட்பாளருடன் பாஜக இளைஞரணி மாநில துணைத்தலைவர் வேல்.ஆறுமுகம், பாஜக முன்னாள் மாவட்ட அமைப்பு செயலாளர் கோமதி சங்கர், நெசவாளர் பிரிவு மூர்த்தி, பிரச்சாரம் மற்றும் வெளியீட்டுப் பிரிவு மாவட்ட தலைவர் P.S.மணிகண்டன், பிரச்சாரம் மற்றும் மாவட்ட செயலாளர் N.மணிகண்டன் மகாதேவன், குன்னத்தூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் முத்துப்பாண்டி, மானூர் தெற்கு ஒன்றிய துணைத்தலைவர் கரிசல் மாரியப்பன், இந்து ஆட்டோ முன்னணி தொழிலாளர்கள் சங்க நிர்வாகி கலையரசன், பாஜக விவசாய அணி பொன்ராஜ், மானூர் தெற்கு ஒன்றிய பொது செயலாளர் கண்ணன், விவசாய அணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தர சுப்பிரமணியன், மானூர் தெற்கு ஒன்றிய வர்த்தக பிரிவு தலைவர் மார்க்கெட் கணேசன், பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி தேர்வுக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், தொழிற்பிரிவு மாவட்ட செயலாளர் சபரிமலைவாசன், சிவலிங்கபெருமாள் மற்றும் அம்பாள் சுரேஷ், சாமிநாதன் என்ற மாரி, ஆனந்த்,நாதன் பாபு,தங்கராஜ் ,சாரதி, மற்றும் பலர் வாக்கு சேகரிக்க உடன் சென்றனர்.