/* */

நெல்லை அருகே சீமானை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் இயக்கத்தை அவதூறு பரப்பும் நாம் தமிழர் கட்சி சீமானை கண்டித்து மானூர் ஊராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

நெல்லை அருகே சீமானை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

நாம் தமிழர் கட்சி சீமானை கண்டித்து மானூர் ஊராட்சி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

காங்கிரஸ் இயக்கத்தை அவதூறு பரப்பும் நாம் தமிழர் கட்சி சீமானை கண்டித்து நெல்லை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் மானூர் ஊராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியையும், காங்கிரஸ் இயக்கத்தையும் அவதூறு பரப்பும் வகையில் செயல்படும் நாம் தமிழர் சீமானை கண்டித்தும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் மேல் பொய் புகார் அளித்து அரசியலில் அவர்களின் வளர்ச்சியை தடுக்க அவதூறு பரப்பும் மத்திய அரசை கண்டித்தும் நெல்லை மானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே தமிழ்நாடு இளைஞர் முன்னாள் பொது செயலாளர் யோபு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி சீமான் மற்றும் மத்திய அரசை கண்டித்து பதாகைகளை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் அணி தலைவர் மரிய குழந்தை, நெல்லை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரிஸ்வான் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 26 May 2022 1:38 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்