நெல்லை: 2022ம் ஆண்டு காந்தி அமைதி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 2022ம் ஆண்டிற்கான காந்தி அமைதி விருது வழங்கப்படவுள்ளது.
HIGHLIGHTS
மகாத்மாகாந்தி 125ம் பிறந்த ஆண்டை கொண்டாடும் வகையில் 1995 முதல் காந்தி அமைதி விருது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வருகிறது. 2022ம் ஆண்டிற்கான காந்தி அமைதி விருது வழங்கப்படவுள்ளது. இவ்விருது பெற சமுதாய, பொருளாதார மாற்றத்திற்கு சிறப்பாக பங்காற்றியவர்கள், அகிம்சை முறையில் அரசியல் மாற்றித்திற்கு வித்திட்டவர்கள், சமூகநீதி மற்றும் நல்லிணக்கம் இவற்றிற்கு சிறப்பாக பங்களிப்பையாற்றியவர்கள் தனி நபரோ, நிறுவனமோ தகுதியானவர்கள்.
இவ்விருது பெறதகுதியானவர்களுக்கு கோடி பரிசும், சான்றிதழும் வழங்கப்படவுள்ளது. இவ்விருதிற்கு வயது, தேசியம், இனம், சமயம் மற்றும் பாலினம் தடையில்லை. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவர்ஹலால் நேரு விளையாட்டரங்கம், பெரியமேடு சென்னை-3 என்ற முகவரிக்கு 15.04.2022க்குள் அனுப்பவேண்டும். மேலும் விபரங்களை, இந்திய கலாச்சார அமைச்சகத்தின் இணையதளமான www.indiaculture.nic.in-ல் தெரிந்து கொள்ளலாம் என நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தெரிவித்துள்ளார்.