/* */

தாமிரபரணி ஆற்றில் உறை கிணறு, நீரேற்று நிலையத்தை நெல்லை மேயர் ஆய்வு

தாமிரபரணி ஆற்றில் உள்ள உறை கிணறு மற்றும் நீரேற்றும் நிலையங்களில் நெல்லை மேயர் சரவணன் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

தாமிரபரணி ஆற்றில் உறை கிணறு, நீரேற்று நிலையத்தை நெல்லை மேயர் ஆய்வு
X

தாமிர பரணி ஆற்றில் நெல்லை மேயர் சரவணன் ஆய்வு மேற்கொண்டார்.

நெல்லை மாவட்டத்தில் தற்போது கோடை வெயில் கடுமையாக இருந்து வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளிளும் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் சீராக கிடைக்க வேண்டும். என்பதற்காக தாமிரபரணி ஆற்றில் தண்ணீரை உறைகிணறுகள் மூலம் நீரேற்று நிலையத்திலிருந்து பொது மக்களுக்கு வழங்கப்படும் இடங்களான தீப்பாச்சி அம்மன் தலைமை நீரேற்று நிலையம், மனப்படைவீடு தலைமை நீரேற்று நிலையம், திருமலைகொழுந்து புரம் நீரேற்று நிலையங்களை நேரில் சென்று திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் மற்றும் துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆய்வு மேற்கொண்டார்கள்.

அப்போது மாநகராட்சி அதிகாரிகளிடம் கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு குடிதண்ணீர் சீராக கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஆய்வின்போது பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையாளர்ஜஹாங்கீர் பாஷா, உதவி செயற்பொறியாளர் சாந்தி, உதவி பொறியாளர் அருள், இளநிலை பொறியாளர் தன்ராஜ் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 24 March 2022 5:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  2. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  4. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  5. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  6. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  7. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  8. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ-பிளஸ் அங்கீகாரம் வழங்கியது நாக்...
  9. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  10. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ