/* */

நெல்லையில் காவல்துறையினர் லஞ்ச ஒழிப்பு உறுதிமாெழி ஏற்பு: துணை கமிஷனர் பங்கேற்பு

நெல்லை மாநகர துணை ஆணையர் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை பணியாளர்கள் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு.

HIGHLIGHTS

நெல்லையில் காவல்துறையினர் லஞ்ச ஒழிப்பு உறுதிமாெழி ஏற்பு: துணை கமிஷனர் பங்கேற்பு
X

நெல்லை மாநகர துணை ஆணையர் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை பணியாளர்கள் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி எடுத்து காெண்டனர்.

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் முனைவர் N.K.செந்தாமரைக் கண்ணன் உத்தரவின் பேரில், சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் T.P.சுரேஷ்குமார் தலைமையில், CWC கூடுதல் காவல் துணை ஆணையாளர் சங்கர், உதவி ஆணையாளர்கள், நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் பிறைச்சந்திரன், காவல் அதிகாரிகள், அலுவலக பணியாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் ஒன்றிணைந்து நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் 26-10-2021-ம் தேதியன்று, லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள்.

நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன். அரசு குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நம்புகிறேன். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு நேர்மை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதை நான் நன்கறிவேன்.

எனவே நான் அனைத்து செயல்களிலும் நேர்மையையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன் என்றும், லஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என்றும், அனைத்து செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்துவேன் என்றும், பொதுமக்களின் நலனுக்காக பணியாற்றுவேன் என்றும், தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் ஒரு முன்னுதாரணமாக செயல்படுவேன் என்றும், ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்கும் தெரியப்படுத்துவேன் என்றும் உறுதி கூறுகிறேன்.

Updated On: 26 Oct 2021 11:11 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...