/* */

கொரோனா 3வது அலை தடுப்பு : செவிலியர், பயிற்சி மாணவிகளுக்கு பயிற்சி

அரசு மருத்துவமனையில் கொரோனா மூன்றாம் அலை தடுப்பு செயல் முறைகளை செவிலியர், பயிற்சி மாணவிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கொரோனா 3வது அலை தடுப்பு :  செவிலியர், பயிற்சி மாணவிகளுக்கு பயிற்சி
X

கொரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க தமிழக அரசு கொரோனா விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்க வலியுறுத்தி உள்ளது. இதையொட்டி திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் ஆலோசனைப்படி குழந்தைகள் நல மருத்துவ பிரிவு இணை பேராசிரியர் வெங்கட சுப்ரமணியன் மூன்றாம் அலை கொரோனா தடுப்பு செயல் முறைகளை செவிலியர், பயிற்சி மாணவிகளுக்கு விளக்கினார். வார்டுகளில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்படும் குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் அச்சத்தை போக்கும் வகையில் விழிப்புணர்வு நலக்கல்வி எவ்வாறு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். மேலும் தடுப்பூசி, முகக்கவசம், தனிமனித இடைவெளி, சானிடைஸர் போன்றவற்றின் அவசியம் குறித்தும் விளக்கினார்.

நிகழ்ச்சியில் குழந்தைகள் நல உதவி மருத்துவர் சங்கரலிங்கம் கலந்து கொண்டார். நிறைவாக செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் சாந்தி இருதயராஜ் தலைமையில் கொரோனா தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

Updated On: 4 Aug 2021 1:58 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  5. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  6. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  9. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?