/* */

நான்குநேரி ஜீயர் குளத்தில் தீயணைப்புத்துறையினர் பேரிடர் ஒத்திகை

நான்குநேரி ஜீயர் குளத்தில் தீயணைப்புத்துறையினர் பொதுமக்களுக்கு பேரிடர் ஒத்திகை செய்து காட்டினர்.

HIGHLIGHTS

நான்குநேரி ஜீயர் குளத்தில் தீயணைப்புத்துறையினர்    பேரிடர் ஒத்திகை
X
பேரிடர் மீட்பு ஒத்திகையில் தீயணைப்புத்துறையினர்.

தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு துறையினர், தன்னார்வ அமைப்புகள் மற்றும் ரெட் கிராஸ் அமைப்பினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட தீயணைப்பு அலுவலரின் உத்தரவின் பேரில் நான்குநேரி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நான்குநேரி தீயணைப்பு நிலைய அலுவலர் பாபநாசம் தலைமையில் ஜீயர் குளத்தில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சியை பொதுமக்களுக்கு செய்து காட்டினர்.

இதில் மழை மற்றும் ஆபத்து காலங்களில் நீர் நிலைகளில் மாட்டி தவிக்கும் பொதுமக்கள் தண்ணீரில் இருந்து எப்படி தப்பிப்பது. மேலும் கையில் கிடைத்த குடம், கேன் போன்ற பொருட்களை கொண்டு எவ்வாறு தப்பிக்கலாம் என்பது குறித்தும் செயல் விளக்கத்தை தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுக்கு செய்து காட்டினார்.

மேலும் பேரிடர் காலத்தில் என்னென்ன வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்தும் விளக்க உரையாற்றினார். இதில் பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 8 Nov 2021 9:33 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  2. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  4. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  6. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  7. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  8. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  9. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  10. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!