/* */

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர் உதயநிதி

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் இன்று திறக்கப்பட்டதால் வியாபாரிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்

HIGHLIGHTS

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர் உதயநிதி
X

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் 

நெல்லை சந்திப்பு பகுதியில் இயங்கி வந்த பேருந்து நிலையத்தை இடித்து புதிய நவீன பேருந்து நிலையமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டும் பணி 2018-ம் ஆண்டு தொடங்கியது.

நீதிமன்ற வழக்குகள், கொரோனா காலக்கட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கட்டுமான பணிகள் தாமதமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பேருந்து நிலைய பணிகள் ரூ.85.56 கோடியில் முழுமையாக முடிந்து இன்று திறப்பு விழா நடைபெற்றது.

மேலும் நெல்லை மாவட்டத்தில் ரூ.436 கோடியில் கூட்டு குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட சந்திப்பு பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார். பின்னர் பேருந்துகள் இயக்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் கருணை அடிப்படையில் அரசு பணிக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் உதயநிதி வழங்கினார். பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் அவர் பெற்றுக் கொண்டார்.


அதனை தொடர்ந்து ரூ.572 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்ததோடு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் ரூ. 85.56 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. நமது ஆட்சியில் விளையாட்டுத்துறை அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து உள்ளது. தற்போது விளையாட்டு துறை சார்பில் டார்லிங் நகரில் ரூ.6.50 கோடியில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் வளர்ச்சியை கிராமம் முதல் நகரம் வரை சீராக இந்த அரசு செய்து வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத மழை வெள்ளம் நெல்லையை புரட்டி போட்டது. மழை வெள்ளத்தால் இந்த பேருந்து நிலையம் பாதிக்கப்பட்டது. இரவோடு இரவாக மழை வெள்ள பாதிப்புகளை மேற்கொள்ள அனைத்து அரசு அதிகாரிகளையும் முதல்வர் முடுக்கிவிட்டார்.

சேலம் மாநாட்டை ரத்து செய்து இங்கேயே அமைச்சர்களும் நானும் தங்கி இருந்து மீட்பு பணியில் ஈடுபட்டோம்.

இன்று பல்வேறு நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் செயல்பட்டு வருகிறது.

நிகழ் காலத்தில் மட்டுமல்ல எதிர்காலத்திற்கு தேவையான அனைத்தையும் தொலைநோக்கு திட்டத் தோடு முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.

சென்னையில் இருப்பது நெல்லையிலும் இருக்க வேண்டும், நெல்லையில் இருப்பது தென்காசியில் கிடைக்கவேண்டும்.

எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம். தி.மு.க. அரசு நெல்லையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.

பேருந்து நிலையம் திறப்பு விழாவையொட்டி சுற்றிலும் புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டிருந்தது. நுழைவு வாயில்களில் வாழை தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது.

நெல்லை நகர மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த சந்திப்பு பேருந்து நிலையம் இன்று திறக்கப்பட்டதால் வியாபாரிகளும், பொது மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Updated On: 18 Feb 2024 11:31 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...