/* */

கொள்ளிடம் ஆற்றுப் படுகையில் மணல் கடத்தல்: வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸார்

திருச்சி மாவட்டம், கள்ளிக்குடி அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் மணல் அள்ளிய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது

HIGHLIGHTS

கொள்ளிடம் ஆற்றுப் படுகையில் மணல் கடத்தல்: வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸார்
X

பைல்  படம் 

திருச்சி மாவட்டம், கள்ளிக்குடி அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றுப் படுகையில், மணல் அள்ளுவதால் தொடர்ந்து காவல் துறையினருக்கு புகார் எழுந்துள்ளது.

இதனையடுத்து, காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். கோட்டைய காவல் துறையினர் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது நம்பர் பிளேட் இல்லாமல் வந்த சரக்கு வாகனத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர்.

அப்போது, அந்த சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த அந்த ஓட்டுனர், ஆட்டோவை நிறுத்தி விட்டு தப்பி ஓடினார். அந்த ஆட்டோவில் ஒரு யூனிட் அளவிற்கான ஆற்று மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர், அதன் உரிமையாளர் பன்னீர் மற்றும் தப்பியோடிய ஓட்டுநர் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Updated On: 23 Aug 2021 1:08 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?