/* */

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

பெரியார் பிறந்த நாளான இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

HIGHLIGHTS

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தந்தை பெரியார் பிறந்த நாளை, சமூக நீதி நாளாக அறிவித்து அவரது பிறந்த நாளில் அனைத்து அரசு அலுவலர்களும் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் இன்று தந்தை பெரியாரின் 143-ஆவது பிறந்த நாளில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தந்தை பெரியாரின் உருவ படத்திற்கு மாவட்ட கலெக்டர் சு.சிவராசு, மலர் தூவி மரியாதை செலுத்தி சமூகநீதி நாள் உறுதிமொழியினை வாசித்தார்.

அதை தொடர்ந்து அனைத்து அலுவலர்களும் சமூக நீதி நாள் உறுதிமொழியினை மீண்டும் வாசித்து ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் த. பழனிகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெயப்ரீத்தா, மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர்கள் தமிழ்கனி,சிவசுப்பிரமணியம்பிள்ளை மற்றும் துணை ஆட்சியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 17 Sep 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்