/* */

திருச்சி மாவட்டத்தில் 3 இடங்களில் ராணுவ பணியில் சேர்வதற்கான எழுத்து தேர்வு

திருச்சி மாவட்டத்தில் 3 இடங்களில் ராணுவ பணியில் சேர்வதற்கான எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

திருச்சி மாவட்டத்தில் 3 இடங்களில் ராணுவ பணியில் சேர்வதற்கான எழுத்து தேர்வு
X

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடைபெறவுள்ள national defence academy andnavel academy and combined defence serviceexamination (i) 2024 ஆகிய தேர்வுகள் 21.04.2024 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.

மேற்படி தேர்வு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மூன்று தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வினை மொத்தம் 674 தேர்வர்கள் எழுதவுள்ளனர். மேலும், 3 தேர்வுக்கூட மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இப்போட்டித்தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியினை மேற்கொள்ள ஒரு இயங்கு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் துணை ஆட்சியர நிலையில் ஒரு அலுவலர் துணை வட்டாட்சியர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், ஆயுதம் ஏந்திய காவலர் ஒருவர் ஆகியோர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு மையத்தை ஆய்வு செய்யும் பொருட்டு வட்டாட்சியர் நிலையில் மூன்று ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.தேர்வு மையத்தில் காவல்துறை மூலம் பாதுகாப்பு பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வழங்கப்பட்டுள்ள கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தேர்வு மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையத்தில் கண்காணிப்பு செய்திட, 3 ஆண் காவலர்கள், மற்றும் 2 பெண் காவலர்கள் என மொத்தம் 5 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு அறைகளில் தேர்வு எழுதும் ஒவ்வொரு 24 தேர்வர்களுக்கும் இரண்டு அறை கண்காணிப்பாளர்கள் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர்.தேர்வு எழுத வரும் தேர்வாளர்கள் செல்லிடை பேசி உள்ளிட்ட எவ்வித மின்னணு சாதனங்களும் தேர்வு மையங்களுக்கு எடுத்து வர அனுமதி இல்லை என தேர்வாணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

Updated On: 15 April 2024 2:21 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை
  2. லைஃப்ஸ்டைல்
    எனக்குள் நீ ; உனக்குள் நான்..! தொடர்வோம் இனிதே இணைந்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!
  4. நாமக்கல்
    கோர்ட் உத்தரவின்படி இழப்பீடு செலுத்ததாத கான்ட்ராக்டர் நுகர்வோர்...
  5. லைஃப்ஸ்டைல்
    சொத்து இல்லைன்னாலும் கெத்து இருக்கணும்..!
  6. லைஃப்ஸ்டைல்
    கோடைக் காலத்துல ஈஸியா எடையை குறைக்கலாம்! எப்படி தெரியுமா?
  7. தொண்டாமுத்தூர்
    நகை பறிப்பு, திருட்டு கொள்ளை சம்பவங்கள் கோவையில் அதிகரித்துள்ளது :...
  8. லைஃப்ஸ்டைல்
    வீரர்கள் சாப்பிடும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் எவை தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ - மாற்ற முடியாத மாற்றங்களை (ஏ)மாற்றமின்றி...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க குழந்தைக்கு இதெல்லாம் குடுங்க..!