Begin typing your search above and press return to search.
திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.13 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பறிமுதல்
திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.13 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பறிமுதல் செய்யப்பட்டது.
HIGHLIGHTS
துபாயில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று வந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ஒரு பயணி கொண்டு வந்த உடைமையில் 5 ஆயிரம் அமெரிக்க டாலர்களும், 50 ஆயிரம் சவுதி அரேபியா ரியால் கரன்சியும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.13 லட்சம் இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.