/* */

திருச்சி போலீஸ் கமிஷனர் உத்தரவின்படி 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின்படி 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

HIGHLIGHTS

திருச்சி போலீஸ் கமிஷனர் உத்தரவின்படி 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
X

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் அருகே கறி கடை ஊழியர் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 7000 மதிப்புள்ள செல்போனை ஜாக்கி என்கிற பிரசாத்(வயது 23). பறித்துச் சென்றார். அவரை கே.கே. நகர் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இதேபோல் கே.கே. நகர் நகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்ற ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 7000 மதிப்புள்ள செல்போனை ஜெயசீலன் (19) என்பவர் பறித்துச் சென்றார். அவரும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரும் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடக் கூடியவர்கள் என்பதால் அவர்கள் இருவரையும் எந்தவித விசாரணையுமின்றி ஒரு வருட காலம் சிறையில் அடைக்க திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார் .இந்த உத்தரவின் நகல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் இருவரிடமும் இன்று வழங்கப்பட்டது.

Updated On: 26 April 2022 10:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  3. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  4. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  5. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  6. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  7. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  8. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  9. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  10. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!