Begin typing your search above and press return to search.
பொது மக்களிடம் குறை கேட்டார் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்
திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் இன்று பொது மக்களிடம் குறை கேட்டு மனுக்களை வாங்கினார்.
HIGHLIGHTS
திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது. மேயர் மு. அன்பழகன் அமாநகர பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் பிரச்சினை மற்றும் சாக்கடை, தெருவிளக்கு, சாலை வசதி தொடர்பான மனுக்களை கொடுத்தனர்.
மாநகராட்சி ஆணையர் ஆர். வைத்திநாதன், துணைமேயர் ஜி.திவ்யா, நகர்நல அலுவலர் எம் .யாழினி மற்றும் மாநகராட்சி , மண்டலக்குழுத் தலைவர்கள் மு.மதிவாணன். ஜெயநிர்மலா,விஜயலட்சுமி கண்ணன், மற்றும் மாநகராட்சி . செயற்பொறியாளர்கள் துணை ஆணையர், உதவி ஆணையர்கள் அப்போது உடன் இருந்தனர்.