Begin typing your search above and press return to search.
திருச்சி அருகே பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தானியங்கி கருவி இயக்க பயிற்சி
Tamil Nadu school news - திருச்சி அருகே பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தானியங்கி கருவி இயக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
HIGHLIGHTS
Tamil Nadu school news - தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் விரைவில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பணியாளர்களின் வருகை இஎம்ஐஎஸ் என்ற தானியங்கி கருவி மூலம் பதிவு செய்யும் முறை அமலுக்கு வர உள்ளது. தாமதமாக வரும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கட் செய்யப்படும்.
இந்த கருவியின் செயல்பாடு பற்றிய செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள், துப்புரவு பணியாளர்கள் வருகையை தினந்தோறும் இஎம்எஸ்ஐ தளத்தில் பிழையின்றி பதிவு செய்யும் பொருட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2