/* */

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் வெளிநாட்டு கைதிகளுக்குள் மோதல்

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் வெளிநாட்டு கைதிகளுக்குள் அடிதடி தகராறு ஏற்பட்டது. இதில் 2 பேர் காயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் வெளிநாட்டு கைதிகளுக்குள் மோதல்
X

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் வளாகத்தில் வெளிநாட்டினருக்கான சிறப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் இலங்கை, நைஜீரியா ஆகிய நாடுகளை சேந்தவர்கள் போதைப்பொருள் கடத்தல், போலி பாஸ்போர்ட், ஆன்லைன் மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கி இங்கு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள வெளிநாட்டினருக்கு சமைத்து உண்ணவும், செல்போன் பயன்படுத்தவும், லேப்டாப் உபயோகப்படுத்தவும் சிறப்பு அனுமதி உண்டு. அவர்கள் குடும்பத்தினரும் இங்கு வந்து பார்த்து செல்லலாம். இந்த சிறப்பு முகாமில் உள்ள ஒரு அறையில் 2 நைஜீரியன்கள் ஐவரிகோஸ்ட்டை சேர்ந்த டேவிட் என்பவரும் தங்கியிருந்தனர்.

இவர்களுக்குள் அறையை பங்கிட்டுக் கொள்வதில் ஏற்கனவே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த அறையில் இருந்த டேவிட், தனது உறவினர்களுடன் பேசுவதற்காக நைஜீரியனிடம் செல்போனை கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததால் இதுதொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வாக்குவாதம் முற்றியதால் கைகலப்பாக மாறி உள்ளது. இதில் இருவரும் ஒருவரையொருவர் மாறி, மாறி கைகளால் சரமாரியாக தாக்கி கொண்டனர்.

இந்த கைகலப்பில் ஐவரிகோஸ்ட் டேவிட் நைஜீரியன் நிக்கிபிலிப் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறை வார்டன்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மத்திய சிறை போலீசார் கொடுத்த புகாரின் பேரில் திருச்சி கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 14 Feb 2022 1:04 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’