/* */

பாலியல் துன்புறுத்தல்களை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

பள்ளி, கல்லூரி மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

HIGHLIGHTS

பாலியல் துன்புறுத்தல்களை கண்டித்து  நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
X

நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

பள்ளி, கல்லூரி மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை கண்டித்து நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பில் திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானா அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் ரா.பிரபு தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் சேது.மனோகரன் முன்னிலை வகித்தார்.

இதில் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் நூர்ஜகான், மாவட்ட மகளிர்பாசறை செயலாளர் லெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி கல்லூரி மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்யும் ஆசிரியர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். பாலியல் வழக்குகளை 3 மாதத்தில் முடித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்ளபட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Updated On: 25 Nov 2021 9:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...