Begin typing your search above and press return to search.
பாலியல் துன்புறுத்தல்களை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
பள்ளி, கல்லூரி மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
HIGHLIGHTS
பள்ளி, கல்லூரி மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை கண்டித்து நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பில் திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானா அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் ரா.பிரபு தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் சேது.மனோகரன் முன்னிலை வகித்தார்.
இதில் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் நூர்ஜகான், மாவட்ட மகளிர்பாசறை செயலாளர் லெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி கல்லூரி மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்யும் ஆசிரியர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். பாலியல் வழக்குகளை 3 மாதத்தில் முடித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்ளபட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.