Begin typing your search above and press return to search.
திருச்சி, பெரம்பலூர், புதுகையில் வருவாய் அலுவலர்கள் இடமாற்றம்
திருச்சி, பெரம்பலூர், புதுகையில் வருவாய் அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
HIGHLIGHTS
தமிழகம் முழுவதும் மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் அதனையொட்டிய பணிகளில் பணியாற்றி வந்த 25 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அவ்வகையில், திருச்சி ஒழுங்கு நடவடிக்கை (சிடிபி) ஆணையரக ஆணையர் செல்வி, புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலராக மாற்றப்பட்டுள்ளார். பெரம்பலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக அலுவலர் கதிரேசன், நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலராகவும், புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், சென்னை பெருநகர அங்கன்வாடி மேலாண்மை குழும தலைமை நிர்வாக அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.