/* */

திருச்சி மாவட்ட காவல் துறை சார்பில் 203 வாகனங்கள் பொது ஏலம்

திருச்சியில் குற்றம் மற்றும் விபத்து வழக்கு தொடர்புடைய 203வாகனங்கள் ஏலம் விடப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி மாவட்ட காவல் துறை சார்பில் 203 வாகனங்கள் பொது ஏலம்
X

திருச்சியில் ஏலம் விடப்படுவதற்கு முன் வாகனங்கள் வரிசயைாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் மற்றும் விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்ற பிறகு பொது ஏலம் விடும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

இந்த ஏலத்திற்கு திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். இந்த ஏலத்தில் ஆம்னி வேன், கார்கள் என 4–நான்கு சக்கர வாகனங்களும்,

டி.வி.எஸ். 50, ஸ்கூட்டி விலையுயர்ந்த பைக்குகள் என 199–இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 203 வாகனங்கள் மைதானத்தில் ஏலத்திற்காக வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

முன்னதாக இந்த ஏலம் தொடர்பாக காவல்துறை சார்பில் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது. இன்று காலை முதல் ஏலம் எடுப்பவர்கள் முன் தொகையாக ரூ.2 ஆயிரம் பணம் கட்டி ஏலத்தில் கலந்து கொண்டு வாகனங்களை தேர்வு செய்து தங்களுக்கான வாகனங்களை ஏலம் எடுக்க மைதானத்தில் குவிந்தனர்.

Updated On: 30 Sep 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்