/* */

திருச்சியில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தவர் கைது

போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததாக துபாயிலிருந்து திருச்சிக்கு திருப்பி அனுப்பட்டவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

திருச்சியில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தவர் கைது
X

மயிலாடுதுறை வட்டம் திருவழுந்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது 36). இவர் கடந்த 16-ந் தேதி ஏர் இந்தியா விமானத்தில் திருச்சியில் இருந்து துபாய்க்கு இந்திய பாஸ்போர்ட் மூலம் பயணம் செய்துள்ளார். அங்கு விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் பிரகாசின் உடைமைகளை சோதனை செய்ததில், அவர் ஸ்பெயின் நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர் வைத்திருந்த ஸ்பெயின் நாட்டு பாஸ்போர்ட்டை தணிக்கை செய்த துபாய் விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் பிரகாசின் போலியான ஸ்பெயின் நாட்டு பாஸ்போர்ட்டை வாங்கிக்கொண்டு, அவரை துபாயில் அனுமதிக்காமல், திருச்சியில் இருந்து பயணம் செய்த அதே ஏர் இந்தியா விமானத்தில் நேற்று அவரை திருச்சிக்கு திருப்பி அனுப்பினர்.

இதனைத் தொடர்ந்து திருச்சி விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பிரகாஷ் ஸ்பெயின் நாட்டுக்கு செல்வதற்காக போலியாக ஏஜென்ட் மூலம் வெளிநாட்டு பாஸ்போர்ட் பெற்றிருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பிரகாசை கைது செய்த ஏர்போர்ட் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 21 Jan 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  2. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  3. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  4. தமிழ்நாடு
    22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு
  5. லைஃப்ஸ்டைல்
    தம்பதிகள் பிறந்த நாள் கவிதைகள் இதோ..!
  6. லைஃப்ஸ்டைல்
    எனதுயிர் நண்பனே உனதுயிர் என் வசம்..!
  7. சினிமா
    தளபதி விஜய்யின் வசனங்கள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    "நினைவுகள்"மூளை கணினியின் ஞாபக மென்பொருள்..!
  9. ஈரோடு
    ஈரோடு: கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு
  10. ஈரோடு
    ஈரோட்டில் தனியார் தொண்டு அமைப்பு முயற்சியால் வேருடன் பிடுங்கி நடப்பட்ட...