/* */

திருச்சி ஜங்ஷனில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் தலை நசுங்கி பலி

திருச்சி ஜங்ஷனில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் தலை நசுங்கி பரிதாபமாக பலியானார்.

HIGHLIGHTS

திருச்சி ஜங்ஷனில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் தலை நசுங்கி பலி
X

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து காந்தி மார்க்கெட் வழியாக தீரன் நகருக்கு செல்லும் அரசு டவுன் பஸ் ஒன்று மத்திய பஸ் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் ஜங்ஷன் ரயில்வே ரவுண்டானா அருகே மெதுவாக சென்றது. அந்த வேளையில் ரயில் நிலையத்தில் இருந்து வேகமாக வந்த 30 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர், பஸ்சின் பக்கவாட்டில் மோதி, பஸ்சின் அடியில் விழுந்தார்.

அப்போது பஸ்சின் பின்பக்க டயர், அந்த நபரின் தலையில் ஏறி நசுக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தகவலறிந்த திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிவப்பு நிற டி-சர்ட் மற்றும் கருப்பு பேண்ட் அணிந்திருந்த அவர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர்? என தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 5 Jan 2022 9:43 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!