/* */

திருச்சியில் ஜூலை 5-ம் தேதி விவசாயிகள் பச்சைத்துண்டு பேரணி- மாநாடு

திருச்சியில் ஜூலை 5-ம் தேதி விவசாயிகள் பச்சைத்துண்டு பேரணி- மாநாடு நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

திருச்சியில் ஜூலை 5-ம் தேதி விவசாயிகள் பச்சைத்துண்டு பேரணி- மாநாடு
X

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் ஐந்தாம் தேதி உழவர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் உழவர் தினத்தை முன்னிட்டு ஜூலை ஐந்தாம் தேதி திருச்சியில் தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது) சார்பாக பச்சைத்துண்டு பேரணி மற்றும் மாநாடு நடைபெற உள்ளது.

இந்த பேரணியானது ஜூலை ஐந்தாம் தேதி பிற்பகல் மூன்று மணி அளவில் திருச்சி சாஸ்திரி சாலை மெகா ஸ்டார் திரையரங்கம் அருகில் இருந்து புறப்பட்டு தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தையை அடையும். பின்னர் அங்கு மாநில அளவிலான மாநாடு தொடங்கி நடைபெறும்.

இந்த மாநாட்டில் வங்கி கடன் ரத்து, விளைபொருட்களுக்கு உரிய விலை கோருதல், நீர்வழி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

மாநாட்டிற்கு மாநில தலைவர் பேராசிரியர் சின்னச்சாமி தலைமை தாங்குகிறார். திருச்சி மாவட்ட தலைவர் ம.ப. சின்னத்துரை வரவேற்று பேசுகிறார். தீட்சிதர் பா. வழக்கறிஞர் கென்னடி முன்னிலை வகிக்கிறார்கள். மாநில பொதுச்செயலாளர் சுந்தரம், மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

Updated On: 17 Jun 2022 12:07 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்