/* */

விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்ற முன்னாள் கவுன்சிலர் மகன் சாவு

திருச்சியில் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்ற முன்னாள் கவுன்சிலர் மகன் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்ற முன்னாள் கவுன்சிலர் மகன் சாவு
X
பைல் படம்.

திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சையது இப்ராகிம் பிச்சை. முன்னாள் கவுன்சிலரான இவரது மகன் ஆசிக் (வயது 19).

இவர் கடந்த மாதம் திருச்சி கோர்ட்டு அருகே தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ரோட்டில் இருந்த மணலில் திடீரென சறுக்கி கீழே விழுந்துள்ளார். இதில் ஆசிக்கின் பின்பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பல நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து புகாரின் பேரில் திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 25 Feb 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  2. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  4. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  5. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  6. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  7. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  9. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?