/* */

திருச்சி மாவட்டத்தில் இன்று 10-வது கட்டமாக கொரோனா மெகா தடுப்பூசி முகாம்

திருச்சி மாவட்டத்தில் இன்று 10-வது கட்டமாக 524 இடங்களில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

திருச்சி மாவட்டத்தில் இன்று 10-வது கட்டமாக கொரோனா மெகா தடுப்பூசி முகாம்
X

திருச்சி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இதுவரை திருச்சி மாவட்டத்தில் 14 லட்சத்து 76 ஆயிரத்து 147 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) 10-வது கட்டமாக கொரோனோ சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி மாநகராட்சி பகுதிக்குட் பட்ட 65 வார்டு பகுதிகளில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் நடமாடும் மருத்துவ குழு சார்பில் 200 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.இதேபோல் புறநகர் பகுதிகளுக்குட்பட்ட திருவெறும்பூர், மணிகண்டம், அந்தநல்லூர், மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி, லால்குடி, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூர், துறையூர், உப்பிலியபுரம், முசிறி, தாத்தையங்கார்பேட்டை, தொட்டியம் ஆகிய வட்டார பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையம், சமுதாயக்கூடம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளிட்ட 324 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் சிவராசு கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 21 Nov 2021 5:49 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்