/* */

திருச்சியில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற செஸ் போட்டி

கார்மல் பல்நோக்கு சமூக கூடத்தில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தமிழக அளவிலான சதுரங்கப் போட்டி இன்று துவங்கியது.

HIGHLIGHTS

திருச்சியில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற செஸ் போட்டி
X

திருச்சியில் நடைபெற்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான செஸ் போட்டி.

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, திருச்சி, எடமலைப்பட்டி புதூர் அருகே உள்ள கார்மல் பல்நோக்கு சமூக கூடத்தில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தமிழக அளவிலான சதுரங்கப் போட்டி இன்று துவங்கியது. 2 நாள் நடைபெறும் இந்த போட்டியில் சென்னை, கன்னியாகுமரி, மதுரை, சேலம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியை கும்பகோணம் அருள்தந்தை பிரிட்டோ துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியை சிகரம் சமூக பல்நோக்கு சேவை மையம் மற்றும் வெற்றி பொதுநல சங்கம் இணைந்து நடத்தி வருகின்றனர். 6 சுற்றுகள் முறையில் இந்த போட்டி நடைபெற்றது.

இது குறித்து பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் கூறியதாவது:

மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் பாரஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தில் இருந்து ஒரு சில வீரர்கள் பங்கேற்றாலும், தமிழகத்தில் கிராமங்களில் முடங்கிக் கிடக்கும் விளையாட்டுத் திறன் அதிகம் உள்ள மாற்றுத் திறனாளிகளை, மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர்கள் மூலம் அரசு கண்டறிந்து, அவர்களுக்கு மாவட்டம் தோறும் சிறப்பு விளையாட்டு திறன் பயிற்சி கூடம் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

Updated On: 11 Dec 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்