/* */

திருச்சியில் கேபிள் நிறுவன தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல்

திருச்சியில் கேபிள் நிறுவன தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

திருச்சியில் கேபிள் நிறுவன தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல்
X

திருச்சி கோட்டை காவல் நிலையம் (பைல் படம்)

திருச்சி பெரியகடைவீதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 50). இவர் பெரிய கடைவீதி பகுதியிலுள்ள சங்கீத் வீடியோ கேபிள் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது முதலாளிக்கும் மற்றொரு கேபிள் நெட்வொர்க் முதலாளிக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக தகராறு நடைபெற்று வந்துள்ளது.

இந்நிலையில் கணேசன் சம்பவத்தன்று தெற்கு சுண்ணாம்புக்கார தெருவில் உள்ள முனீஸ்வரன் கோயில் அருகே கேபிள் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த அடையாளம் தெரியாத இருவர் கணேசனை தகாத வார்த்தைகளால் பேசி கத்தியால் அவரது வலது கையில் கிழித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்து கணேசன் கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசனை கத்தியால் கிழித்து கொலை மிரட்டல் விடுத்த இருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 23 Nov 2021 10:40 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்