Begin typing your search above and press return to search.
திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 437 பேர் பாதிப்பு
திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் மேலும் 437 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.
HIGHLIGHTS
திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 437 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 32 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நேற்று வீடு திரும்பினர்.
திருச்சியில் கொரோனா தொற்றுக்கு நேற்று யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது வரை 1,698 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் இதுவரை மொத்த கொரேனா பாதிப்பு 80 ஆயிரத்து 665 ஆக உள்ளது. இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,104 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.